தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே வரவழைக்கப்பட்டுள்ளார். அவரும் டாக்டர்கள் குழுவினருடன் இணைந்து ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்.


ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தற்போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தனது பேஸ்புக்கில் முதல் அமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய  பிரார்த்திப்பதாக வாழ்த்து தெரிவித்து உள்ளார்.