சென்னை: பெண் ஒருவர் கிண்டி முதல் தாம்பரம் வரை புறநகர் ரயிலில் பெண் பயணிகள் பயணிக்கும் பெட்டியில் பயணிக்கும் போது ஆபாசமாக நடந்துகொண்ட வாலிபர் குறித்து வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வீடியோ வைரலானதை அடுத்து, அதன் அடிப்படையில் தாம்பரம் ரயில்வே போலீசார் அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


ரயிலில் பயணிக்கும் போது ஆபாசமாக செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரித்துள்ளது. அதேநேரத்தில் பெண்களும் தைரியமாக ரயில்வே காவல்துறையில் வந்து புகார் அளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இரவு நேரத்தில் சென்னை புறநகர் ரயிலில் உள்ள பெண்களில் பெட்டியில் ஏறிய வாலிபர், அங்கு தனியாக பயணம் செய்த பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்துள்ளார். 


மேலும் படிக்க: போதையில் மகளுக்கு பாலியல் தொல்லை - கணவனை கொன்ற மனைவி


அந்த பெட்டியில் யாருமே இல்லாததால், பெண் முன்னிலையில் அசிங்கமான செயலில் ஈடுபட்டு உள்ளார். அதைபார்த்த அந்த பெண் கூச்சல் போட்டுள்ளார். மேலும் அந்த இளைஞரின் செயலை தனது மொபைல் போனில் வீடியோ எடுக்க முயற்சித்ததும், அந்த வாலிபர் அங்கிருந்து ஓட முயற்சித்துள்ளர். ஸ்டேஷனில் ரயில் நின்றதும் இறங்கி ஓடினார். 


ரயிலில் தனியாக இருந்த அந்த பெண்ணின் துணிச்சலை பலர் பாராட்டி வருகின்றனர். 


மேலும் படிக்க: 4ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினருக்கு தர்ம அடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR