சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய மழையால் வெப்பம் தணிந்து குளிச்சியாக காணப்படுகிறது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 


இதையடுத்து, நேற்று இரவு முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு பகுதியில் கன மழை பெய்தது. வேளச்சேரி, கிண்டி, வடபழனி, நுங்கம்பாக்கம், தாம்பரம், பல்லாவரம், ராயபேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. 


மேலும் சென்னையில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலைமையம் தெரிவித்துள்ளது...!