கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வந்த நிலையில், வெப்பம் சற்றே தணிந்து தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


சென்னையில் தியாகராய நகர், அசோக் நகர், உள்ளிட்ட பகுதிகிளில் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சேலம், ஓமலூர் கிரிஷ்ணகிரி, போச்சம்பள்ளி, குன்னூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.