வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரை மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாக வாய்ப்பு உள்ளது. 


கடந்த 24 மணி நேரத்தில், சின்னக்கல்லாறு, நடுவட்டம், அவிநாசி பகுதிகளில் 2 செ.மீ., மழையும், வால்பாறையில் ஒரு செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.