பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1342_வது பிறந்த நாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர தேவையில்லை. தமிழ்நாட்டில் 40 வருடங்கள் இருந்ததால் தமிழகத்தை ஆளலாம் என நினைக்ககூடாது. தமிழினத்தின் பெருமையும், வரலாறும் தெரியாதவர் எதற்காக எங்களை ஆள வேண்டும். மகாராஷ்டிராவில் லட்சக்கணக்கான தமிழர்கள் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மகாராஷ்டிராவை ஆள முடியுமா? 


தமிழகத்தை ஆள எங்களுக்கே தான் உரிமை உள்ளது. நாங்கள் ஆள்வோம். ரஜினிகாந்த் தேவையில்லை. அவர் தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதை நாங்களே செய்து கொள்வோம்.


ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத்தேவையில்லை. அப்படி அவர் அரசியலுக்கு வந்தால், அதை நாங்கள் எதிர்ப்போம் என சீமான் கூறினார்.