நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பின்னர் புது கட்சி தொடங்கி, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும்அவர், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாகக் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் செய்யப் போவதாக அவர் அறிவித்திருந்தாலும், திராவிட இயக்கத் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகிறார்.இதைத்தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஆர்எம் வீரப்பன் ஆகியோரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.


இந்நிலையில், அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் பெயர் ரஜினி மக்கள் மன்றம் என மாற்றப்பட்டுள்ளது. அரசியல் கட்சிக்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் இணையதளத்தில் பெயரை ரஜினி மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.