ராமநாதபுரம் கீழச்செல்வனூர் காவல் நிலையம் அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தும் சிவகாசியிலிருந்து ராமநாதபுரம் வந்த காரும் கீழ செல்வன் ஊர் காவல் நிலையம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. 


இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சதீஷ், உமையபாலா, விஜயராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் கடலாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.