இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதன் பரவலைக் குறைக்க, இப்போது 75 மாவட்டங்களும் பல மாநிலங்களும் மார்ச் 31 வரை Lockdown செய்யப்பட்டுள்ளது. இதுவரை 503 பேரில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 40 பேர் வெளிநாட்டினர். சிகிச்சையின் பின்னர் 35 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், 9 பேரும் இறந்துள்ளனர். இது குறித்து மக்களுக்கு இந்திய அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது, இது பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மாலை முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த உத்தரவால் பல்வேறு தரப்பட்ட தொழில்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும், ரேசன் கடைகளில் விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.3250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.