ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இட ஒதுக்கீடு தொடர்பான அரசாணையைத் தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் கடந்த 2016-ம் ஆண்டே முடிவடைந்துவிட்டது. இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தல் (Local body election) நடத்துவது தள்ளிப்போனது. இறுதியாக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, முதல்கட்டமாக 27 மாவட்டங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடந்தேறின.  


ALSO READ | Elections: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கின 


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் தொகுதி வரையறை பணிகள் நடைபெறாத காரணத்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதற்கிடையில் இந்த தேர்தலை வருகிற செப்டம்பர் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது. 


அதன்படி 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்துமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். இதனையடுத்து விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.


அந்தவகையில் தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்று கடந்த 31ஆண் தேதி அன்று வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. மேலும் வாக்காளர் பட்டியலை https://tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதற்கிடையே 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்தில்கொண்டு இப்போது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில் தற்போது 9 ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர் பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தென்காசி, ராணிபேட்டை பொது பிரிவு பெண்களுக்கும், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி பட்டியல் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Also Read | இடத்தை தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR