ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று தொடங்கவுள்ள புதிய அமைப்பின் மூலம் லட்சிய பாதையை வகுத்து வெற்றி அடைவோம் என்றும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்றும் தீபா தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று ஆதரவாளர்கள் மத்தியில் தீபா பேசியதாவது:-


இன்று புதிய அரசியல் அமைப்பை தொடங்கவுள்ளோம். அதற்கான லட்சியப் பாதை அமைக்கப்பட்டு வெற்றி அடைவோம். விரைவில் கபட நாடகங்கள் அம்பலமாகும். அதிமுவின் வெற்றி சின்னமான இரட்டை இலையை மீட்போம் என்றார். தனது வீட்டில் புதிய அரசியல் அமைப்புக்கான அலுவலகத்தை தொடங்கியுள்ள தீபா, இன்று மாலை 5 மணிக்கு  கட்சியின் பெயர், கொடி, நிர்வாகிகள் உள்ளிட்வற்றைஅறிவிக்கவுள்ளார்.


மேலும் முன்னால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஏற்பாடு செய்துள்ள ஆர்.கே., நகரில் நிகழ்ச்சியில் தான் பங்கேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.