மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பிய விஜயகாந்த், இன்று ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ப.மதிவாணனை ஆதரித்து 9-ம் தேதி(ஞாயிற்றுகிழமை) மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்காளப் பெருமக்களை சந்தித்து முரசு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று 38, 39, 40, 41, 42, 43, 47 ஆகிய வட்டங்களில் வீதி, வீதியாக கழக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மொத்தம் 62 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகின்ற 12-ம் தேதி நடக்கிறது.


முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.