பெர்மபலுர் அறியலூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ரூ. 2.10 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரம்பலூர் - அரியலூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரின் கதவுகளின் உட்புற தகடுகளில் ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மொத்தம் 2 கோடியே 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தற்போது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.