கோவை மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. ஆறுமுகம் என்ற பயிற்சியாளர் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த போது, லோகேஸ்வரி என்ற மாணவி எதிர்பாராதவிதமாக, மாணவி கல்லூரி கட்டடத்தின் சுவர் மீது மோதி கீழே விழுந்தார். 


இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைபலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்துள்ளது. மேலும், கல்லூரி முதல்வரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் பேரிடர் பயிற்சியின் போது உயிரிழந்த மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.