சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 1 கோடி மதிப்பிலான 716 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்று நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று காலை வந்த ஊழியர்கள் அலுவலகத்திற்குள் வந்து பார்த்த போது லாக்கர்கள் உடைக்கப்பட்டது தெரியவந்தது. நிதிநிறுவனத்தின் பின்புறமாக ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், லாக்கர்களை உடைத்து, 6 பெட்டிகளில் 491 பைகளில் வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர். 


சேலம் மாவட்ட போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினார். மோப்ப நாய்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் இருந்த அலாரம் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவும் ரிப்பேர் காரணமாக ஒரு மாதத்திற்கு மேல் செயல்படவில்லை. இது குறித்து மேல் அதிகாரிகளிடமும் தகவல் தெரிவிக்கவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது