மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 8 மணிக்கு டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட சம்பா சாகுபடிக்கு செப்டம்பர் 20-ம் தேதி தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை 8 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு நீர்திறக்கப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.


தண்ணீரை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, விஜயபாஸ்கர், சரோஜா, கருப்பண்ணன், முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.