தமிழகத்தில் ஒரே பெயரில் உள்ள இருவருக்கு, ஒரே எண் கொண்ட, 'பான் கார்டு' வழங்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


திருச்சியை சேர்ந்தவர் செந்தில்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன், வருமான வரித்துறை மூலம் பான் கார்டு வழங்கப்பட்டது. அதில் “DYRPS6164P" என்ற எண் இடம்பெற்றுள்ளது. 


இந்நிலையில் இவர், வங்கியில் தனிநபர் கடன் கேட்டு ரேஷன் கார்டு, ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தார். அதனை வங்கி மேலாளர் ஆய்வு செய்தபோது, அவரது பான் கார்டு எண்ணில் வந்த சான்றானது அதே பெயரில் வேறு ஒரு முகவரியை காண்பித்தது. 


இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரி, இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் தெரிவிக்க அறிவுறுத்தியதோடு, பான் கார்டை ஆய்வு செய்தபோது கணினியில் வந்த முகவரியை செந்தில்குமாரிடம் தெரிவித்தார். 


அதன் அடிப்படையில் செந்தில்குமார், கீழவாளாடியை சேர்ந்த மற்றொரு செந்தில்குமாரை நேரில் சந்தித்து விசாரித்தபோது, இருவரது பான் கார்டு எண்கள் மற்றும் தந்தை பெயர், பிறந்த தேதி ஆகியவை ஒரே மாதிரி இருப்பது தெரிய வந்தது. 


இது குறித்து, இரு செந்தில்குமாரும், வருமானவரி துறை அலுவலகத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர்.