சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தற்போது சட்டசபைக் குழு தலைவராக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் 9-ம் தேதி சசிகலா பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம் நடைபெற்றது.  


இதனையடுத்து 7 அல்லது 9-ம் தேதியில் அவர் முதல்வராக பதவி ஏற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 


பொறுப்பு கவர்னர் வித்யாசாகர ராவ் தற்போது வட மாநிலத்தில் இருப்பதால் சென்னைக்கு உடனடியாக வருவதற்கு வாய்ப்பில்லை. திங்கள் கிழமைக்கு பிறகுதான் கவர்னர் சென்னைக்கு வருகிறார். அதன் பின்னரே அவரை சந்தித்து முறைப்படி பதவி ஏற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்படும் என்பதால் 7 அல்லது 9-ம் தேதி சசிகலா பதவி ஏற்கும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.