சென்னை: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைரவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தேர்வாகியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவும், தமிழக முதல் அமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 


இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் நடக்கிறது. 2-வது முறையாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.


கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி சசிகலா ஆலோசனை நடத்தினார். இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போது 2-வது முறையாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டது.


இந்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைரவராக சசிகலா தேர்வாகியுள்ளார்.