சென்னை: தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் பரப்பரப்பான பேட்டியை தொடர்ந்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்திற்கு கட்சி பொதுச்செயலாளர் சசிகலா அழைப்புவிடுத்திருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலை 11.40 மணியளவில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கி ஒரு மணி நேரம் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 11.40 மணிக்குதான் கூட்டம் தொடங்கியது.


அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில் 131 அதிமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்ததைத் தொடர்ந்து, அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதையடுத்து அதிமுக சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் இன்று கூட்டப்பட்டது.