ஜல்லிக்கட்டுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என சசிகலா நடராஜன் அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்; ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். பீட்டாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன் வைத்து போராடி வருகின்றனர்.


இந்தநிலையில் ஜல்லிக்கட்டுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை முற்றிலுமாக நீக்கக்கோரும் தீர்மானம், அணைத்துக்கட்சிகளின் ஒருமித்த குரலால் நிறைவேற்றுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.