சென்னை: தமிழக முதல்வராக இன்று சசிகலா பதவியேற்க உள்ளதாக தகவல் வந்தநிலையில், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், இன்று சென்னை திரும்பும் திட்டமில்லை எனக்கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பை சென்றடைந்தார். இதனால் சசிகலா பதவியேற்க இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


அதேநேரத்தில் அவர் நாளை வரை சென்னை திரும்பும் திட்டமில்லை எனவும் செய்திகள் வெளியாகின. உடனடியாக பதவியேற்பு செய்து வைக்கும் எண்ணத்திலும் கவர்னர் இல்லை எனக்கூறப்படுகிறது. 


சசிகலா பதவியேற்பு தொடர்பாக அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வத்தை மாற்று ஏற்பாடு தொடரும் வரை பதவியில் தொடர வேண்டும் என கவர்னர் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கவர்னரின் சென்னை வருகை ரத்தானதால் சசிகலா பதிவியேற்கும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பபடுகிறது. இதனால் சசிகலா முதல்வராக பதவி ஏற்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.