காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் வழக்கின் இப்போதைய அப்டேட் .. கைதான அன்று சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்ட போலீஸ் வேன் விபத்தில் சிக்கிய சிசிடிவி வெளியானது.. என பல முக்கிய தகவல்களை காணலாம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வந்தவர் தான் சவுக்கு சங்கர். சவுக்கு மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவர் பல யூடியூப் சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டி அளித்து வந்தார். அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிடோரை படுமோசமாக விமர்சித்து வந்தார். அதோடு சமீபத்தில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவர் தேனியில் ஒரு விடுதியில் இருந்து கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது கார் ஓட்டுநரும் உதவியாளரும் கூட கைதானாகள். அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 


கைதுக்கு பிறகு சவுக்கு சங்கர் மட்டும் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் சென்ற வாகனம் சனிக்கிழமை அதிகாலை ஒரு காரின் மீது மோதியது. இதில் காவலர்கள் சிலர் காயம் அடைந்தனர். அதோடு சவுக்கு சங்கருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. 


மேலும் படிக்க | விஜய் அரசியல் கட்சிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த ரியாக்ஷன்


அதன்பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பிறகு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. மீண்டும் வேனில் ஏற்றுவதற்காக அவரை போலீசார் அழைத்து வந்தபோது, திமுகவுக்கு எதிராக கோஷமிட்டார்.


நீதிமன்ற உத்தரவை அடுத்து கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன்பிறகு சவுக்கு சங்கர் ஆதரவாளர் அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.   கடந்த முறை கடலூர் சிறையில் அவர் இருந்த போது  அப்போது சிறை துறையை கவனித்து வந்த செந்தில்குமார் என்ற அதிகாரியை மோசமாக சாடி இருந்தார். அதே அதிகாரி தான் தற்போது கோவையிலும் அதிகாரியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது . இதனால் சிறையில் அவரது உயிருக்கு ஆபத்து என பேசப்பட்டது. அவர் மீது தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியான நிலையில், கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.


சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை சந்தித்தப்பின் அளித்த பேட்டியில், சவுக்கு சங்கர் கோவை சிறையில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  


இந்த புகாருக்கு கோவை சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்படவில்லை என்றும், சிறையில் எந்த கைதியும் தாக்கப்படுவதில்லை என்றும்  சிறைத்துறை ஏடிஜிபி விளக்கம் அளித்துள்ளார். 


சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசார்  ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவு படுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சவுக்கு சங்கர் வழக்கில் அடுத்து என்ன நடக்கும், அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது குறித்தெல்லாம் பொருத்திருந்து பார்க்கலாம்.


மேலும் படிக்க | கோவை : சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ