தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அடுத்த மாதம் 21 முதல் விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2-ஆம் தேதி பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 24-ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. அதேபோல் பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 4-ஆம் தேதி தேர்வு தொடங்கிவிட்டது. அவர்களுக்கு 26-ஆம் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. இதில், எஸ்.எஸ்.எல்.சி. (பத்தாம் வகுப்பு) மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற 27-ஆம் தேதி தொடங்க உள்ளது.


இந்நிலையில் அடுத்த மாதம் 21-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வேலைநாட்கள் குறித்த அட்டவணை வெளியிடப்படும். அதில் உள்ள அட்டவணைப்படி, அடுத்த மாதம் 21-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறைதான். அதில் மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்தார்.