பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் இயங்க பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் (CoronaVirus) காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் (School) மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு (Online Class) மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் (Schools Reopen) என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது தொடர்ந்து பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 


இதற்கிடையில், பிப்ரவரி மாதம் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு (TN Govt) உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திரையரங்குகள் 100 சதவித இருக்கைகளுடன் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.


ALSO READ | தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் EPS!


இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., தமிழகத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி நள்ளிரவு வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி. இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி. 


தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்க்குகள் நேரக்கட்பாடுகள் இன்றி இயங்கலாம். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் குளங்கள் செயல்படலாம். நாளை முதல் திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சிகளை நடத்தலாம். ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடுதல் நிகழ்ச்சிக்கு அனுமதி.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR