நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சில தினங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் பேசுகையில் தமிழர்களின் மதம் சைவமும் மாலியமும்தான் என்று கூறினார். கிறிஸ்துவ மதம் ஐரோப்பிய மதம் என்றும் இஸ்லாமிய மதம் அரேபிய மதம் என்றும் பேசினார். மேலும் செக்கு எண்ணெய்க்கு திரும்புவது போல அனைவரும் திரும்பிவர வேண்டும் என்று சீமான் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. ”சீமான் (Seeman) இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தாய் மதம் திரும்ப வேண்டும் என பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ்.-இன் குரலாக சீமான் ஒலிக்கிறார்” என சமூக வலைதளங்களில் எதிர்கருத்துடையோர் சீமானை விமர்சித்தனர்.


ALSO READ | சீமான் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சொல்வதெல்லாம் சுத்த பொய் - வைகோ


 


இந்நிலையில் நேற்று ஒரு கூட்டத்தில் பேசிய சீமான், “நான் அவ்வாறு கூறவே இல்லை” என மறுத்தார். “நான் மதம் பரப்ப வந்தவன் அல்ல” என்றும் “இனம் பரப்ப வந்தவன்” என்றும் பேசினார். ஹெச்.ராஜா தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் என்று பேசியபோது எதிர்க்காதவர்கள் தன்னுடைய பேச்சை திரித்து பேசுவதாக ஆதங்கப்பட்டார். மேலும் தன்னுடைய எச்சிலில்தான் பலர் கட்சி நடத்தி வருவதாகவும் அவர்களுக்கு வேறு வேலை இல்லை என்றும் பேசினார்.


 



 


 



 


சீமானின் இந்த பேச்சு இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது. அன்றைய கூட்டத்தில் சீமான் மதத்திற்கு திரும்புங்கள் என்று கூறியதையும், நேற்று நான் அப்படி சொல்லவே இல்லை என்று பேசியதையும் ஒப்பிட்டு இணையவாசிகள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR