தமிழகத்தில் ஏப்ரல் 30 மற்றும் மே 1ம் தேதி பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏப்ரல் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் புயலாக மாறும். இதனால் வடதமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும் எனவும்ட, இதன் காரணமாக தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1ம் தேதி பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


மேலும் தமிழகத்தில் ஏப்ரல் 30 மற்றும் மே 1ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் மிக பலத்த  முதல் மிகமிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இந்த புயல் இலங்கை கடல் வழியாக 30-ம் தேதி வட தமிழகம்-தெற்கு ஆந்திரா கடல் பகுதியை நோக்கி நகரும். இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். புயல் கரை கடக்கும்போது காற்றின் வேகம் 65 கிமீ வரை அதிகரிக்கலாம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.