விழுப்புரம் கோனூர் பகுதியை சேர்ந்த திருமணமான 20 வயது கல்லூரி மாணவி சென்னை தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரி முடிந்து தனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் கோனூர் பகுதிக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | சிறுமியை கடத்திச் சென்ற டியூசன் மாஸ்டர் : உதவிதேடும் கோவை மாநகர போலீசார்!


இந்நிலையில் நள்ளிரவு என்பதாலும் பேருந்தில் பயணிகள் குறைவாக இருந்த காரணத்தாலும் நடத்துனர் சிலம்பரசன் என்பவர் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்கள் செய்து வந்துள்ளார் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில் இவர் இறங்கும் இடத்திற்கு முன்பாக பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாத சூழ்நிலையில் பேருந்து நடத்துனர் சிலம்பரசன் மற்றும் ஓட்டுநர் அன்புச்செல்வன் உள்ளிட்ட இரண்டு நபர்கள் கல்லூரி பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். 



பெண் கூச்சலிட அக்கம் பக்கத்தில் இருந்த கிராம மக்கள் அவரை மீட்டு காணை காவல்நிலையத்தில் தனது கணவருடன் புகார் அளித்திருந்த நிலையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவர் மீதும் தனியாக இருந்த பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்து இரண்டு நபர்களையும் கைது செய்து காணை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்தில் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ | நரிக்குறவர் குடும்பத்தை பாதி வழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடைநீக்கம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR