காவேரிப்பாக்கம் அருகே நீர்மூழ்கி மின் மோட்டார் பழுது நீக்க கிணற்றில் இறங்கிய மாமனார் மற்றும் மருமகன் இருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம், கரிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி (Farmer) மணி. இவர் சிவா என்பவரிடம் குத்தகை எடுத்த நிலத்தில் விவசாயம் செய்ய தனது மருமகனுடன் நிலத்திற்குச் சென்று விவசாயம் செய்து கொண்டிருந்தார். 


விவசாயி மணிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் நிர்மலா. அவருடைய கணவர் அதே கிராமத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.


 மணி, அதே கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவர் நிலத்தை கடந்த 6 ஆண்டுகளாக குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார். கடந்த போகம் அறுவடை செய்த நிலையில் தற்போது பெய்து வரும்  தொடர் மழைக்கு மீண்டும் விவசாயம் செய்ய நிலத்திற்கு சென்ற மணி மின்மோட்டாரை இயக்கி உள்ளார். மின்மோட்டார் நீர்மூழ்கி மோட்டார் என்பதால் நீர் குறைவாக வருவதால் மோட்டார் சேற்றில் சிக்கி கொண்டிருக்கலாம் என்று மணி முதலில் கயிற்றைக் கட்டி உள்ளே இறங்கி உள்ளார்.


12 ஆழமும் 6 அடி அகலம் கொண்ட உரை கிணற்றில் முதலில் இறங்கிய மணி தவறி உள்ளே விழுந்ததும் காப்பாற்ற உடனே மருமகன் சுபாஷ் இறங்கியபோது, துரதிஷ்டவசமாக இருவரும் உள்ளே விழுந்ததாக காவல்துறை (Police) தரப்பில் கூறப்படுகிறது.



நிலத்திற்கு சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை என்று சுபாஷின் மனைவி நிர்மலா கிணற்றுக்கு அருகே வந்து பார்த்தபோது இருவரின் உடைகள் கிணற்றுக்கு மேலே இருந்ததைக் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தார்.



ALSO READ:கோவை மாணவி தற்கொலை வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது 


தகவலின் அடிப்படையில் அவலூர் காவல்துறையினர் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்புத்துறையினர் கிணற்றில் சடலம் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதற்கான ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது தீயணைப்புத்துறையினர் கிணற்றில் எண்ணெய் ஊற்றிய தீப்பந்தம் காட்டியபோது கிணற்றில் இருந்த வாயுக்காற்று தீப்பந்தத்தை மீண்டும் அதிக விசையுடன் எரிய வைத்தது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர் பாதாள கொலுசின் உதவியுடன் இருவரின் சடலங்களையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


விவசாயம் செய்யச் சென்ற விவசாயி மணி மற்றும் மருமகன் சுபாஷ் கிணற்றில் விஷவாயு தாக்கி இறந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து சுபாஷின் மனைவி நிர்மலா அளித்த புகாரின் அடிப்படையில் அவலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


விவசாய கிணற்றில் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் (Accidental Death) காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ:குடிபோதையில் வாகனத்தை ஒட்டி விபத்து: இருவர் கவலைக்கிடம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR