சென்னையில் சோழவரம், ஆத்தூர் மேடு பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின்போது அவருடைய அண்ணுக்கும் தலையில் அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொலையில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முன்விரோதம் காரணம் இந்த கொலை நடைபெற்று இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செங்குன்றம், சோழவரம் அடுத்த ஆத்தூர் மேடு பகுதியை சேர்ந்தவர் சரித்திர பதிவேடு குற்றவாளியான தனுஷ் (22). அவர் இன்று தன்னுடைய வீட்டில் இருந்தபோது அங்கு திடீரென மர்ம நபர்கள் சென்றுள்ளனர். தனுஷை சுற்றி வளைத்த அவர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதனை தடுக்க வந்த அவரது அண்ணன் வினித்தின் தலையிலும் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றனர். இதில் தலையில் வெட்டு காயமடைந்த வினித்தை அப்பகுதி மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை குறித்து விசாரணையில் ஈடுபட்டனர். 


மேலும் படிக்க | சிறுவன் மீது மது போதையில் தாக்குதல்... தலைமறைவான பாடகர் மனோவின் மகன்கள் - நடந்தது என்ன?


கடந்த சில நாட்களுக்கு தனுஷ் தமது அண்ணன் வினித்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அதே ஊரை சேர்ந்த குமார் என்பவரது லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் லாரி உரிமையாளர் குமார் இருசக்கர வாகனத்தை பழுது பார்த்து தருவதாக கூறியுள்ளார். விபத்து நடந்து ஒரு வாரமாகியும் இருசக்கர வாகனம் பழுது பார்த்து தராததால் தனுஷ் இதுகுறித்து லாரி உரிமையாளர் குமாரிடம் செல்போனில் பேசியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அதாவது, தனுஷ் அவரை மிரட்டியதாக தெரிகிறது.


இதனால் முந்திக் கொண்ட அந்த நபர் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக தெரிகிறது. இருப்பினும் இந்த காரணத்துக்காக தான் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தனுஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு காவல்துறை அனுப்பி வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி கொலையில் ஈடுபட்ட லாரி உரிமையாளர் குமார், கார்த்திக், மணிகண்டன், அய்யப்பன், சந்தோஷ், மோகன்குமார் ஆகிய 6 பேரை கைது செய்தனர். சென்னையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | அன்னபூர்ணாவில் நான் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை... வானதி கொடுத்த தீடீர் விளக்கம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ