சென்னை: ஜெயலலிதா மரணம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ராமசீதா என்ற பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஆர்.கே. நகரில் நடந்த தீபா பேரவை கூட்டத்தில் ராமசீதா என்பவர் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் நான் அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர். ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே, இறந்த நிலையில் தான் கொண்டு வந்தார்கள் எனக்கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
 
இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில், ராமசீதா டாக்டர் இல்லை என தெரியவந்து போலீசார், ராமசீதாவை கைது செய்தனர்.