சிவகங்கை நகரத்தின் மையப்பகுதியில் பெரிய தெப்பக்குளம் ஒன்று உள்ளது. அரண்மைக்கு அருகே அமைந்திருக்கும் இந்த தெப்பக்குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்த தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பத்தை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக காவல்துறைக்கும் இது குறித்து தகவல் கொடுத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஆளுநர் தமிழிசையை மாடு முட்டவந்ததால் பரபரப்பு - வேகமாக பரவும் வீடியோ


இதனடிப்படையில் தெப்பக்குளம் பகுதிக்கு சென்ற காவல்துறையினர், 35 வயது மதிக்கத்தக்க ஆண்சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, அந்த ஆண் சடலத்தின் முகத்தில் ரத்தக்காயங்கள் இருந்தது. இதனால், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். 


ALSO READ | 4ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினருக்கு தர்ம அடி


மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியிலேயே ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருப்பது சிவகங்கை நகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிணமாக கிடந்த நபர் யார்? அவர் சிவகங்கையைச் சேர்ந்தவரா? என்ற கோணத்தில் முதல் கட்ட விசாரணையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். முன்பகையால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட தகவல்கள் அவரை அடையாளம் கண்டபிறகே தெரிய வரும் என காவல்துறை கூறியுள்ளது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR