சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் ஏப்ரல் 8-ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் மேளாவை நடத்துகிறது. இதற்கான முன்பதிவு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை சாலிகிராமம், தாம்பரம் மற்றும் அமைந்தகரை ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையம்,  ஏப்ரல் 8-ம் தேதி அன்று இயங்கும். பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் விண்ணப்பங்கள் வழக்கம்போல பெற்றுக்கொள்ளப்படும். இந்த பாஸ்போர்ட் மேளாவில் பங்கேற்க, விண்ணப்பதாரர்கள் அனைவரும், பாஸ்போர்ட் அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.passportindia.gov.in மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பப் பதிவு எண்ணை பெற்றுக்கொண்டு, ஆன்லைனிலேயே விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, சந்திப்பு முன்பதிவு நேரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.


விண்ணப்பதாரர்கள், தங்களது சந்திப்பு முன்பதிவு விவரம்கொண்ட ஏஆர்என் பதிவு எண் தாளை, அச்சிட்டு எடுத்து வரவேண்டும். தேவையான அனைத்து ஆவணங்களையும் அசலுடன், சுய சான்றளிக்கப்பட்ட ஒரு நகலுடன் கொண்டு வரவேண்டும். 


புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும். தத்கால் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள், காவல்துறை தடையின்மை சான்றிதழ் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது.