புதுக்கோட்டை: இன்று அதிகாலை புதுக்கோட்டை மீனவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மின்னல் வேகத்தில் வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனை பார்த்த புதுக்கோட்டை மீனவர்கள் அச்சத்துடன் அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் அதில் ஒரு மீனவரின் சொந்தமான விசைப்படகினை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததால் இலங்கை கடல் படையினர் திட்டி உள்ளனர்.


பின்னர் அந்த படகில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட மீன்களை அபரித்துக்கொண்ட இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களையும் கைது செய்தனர்.


கடந்த சில மாதங்களாக சிறைப்பிடிப்பு சம்பவங்கள் இல்லாமல் புதுக்கோட்டை மீனவர்கள் மீன் பிடித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.