சென்னை: ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று அதிமுக நிர்வாகிகள் கூறி வரும் நிலையில் இன்று பாஜக மூத்த தலைவரும் ராஜ்ய சபா உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமியும் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்ப உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் செப்டம்பர் 22-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். அப்பல்லோ மருத்துவ குழுவினருடன், லண்டனில் இருந்துவந்த மருத்துவர் ரிச்சர்டு ஜான்பீலே, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை யின்  நிபுணர் மருத்துவர் கில்நானி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் இணைந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.


இது குறித்து சுப்ரமணியன் சுவாமி டுவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதா சுய நினைக்கு திரும்பிவிட்டார் என்று எனக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.