முன்னாள் முதல்வர் ஜெ., அவர்களின் மரணம் சந்தேகத்திற்குறியது என அறிவிக்க வேண்டும் கோரிய மனுவினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் முதல்வர் ஜெ., மரணம் சந்தேகத்திற்குறியதாக இருப்பதாகவும், அதனை சந்தேக மரணம் என்று அறிவிக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் வேலன் தொடுத்த வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி MV முரளிதரன் "இந்த வழக்கினை குறித்து ஏற்கனவே அரசின் சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதினால், இந்த மனுவினை ஏற்றுக்கொள்ள முடியாது" என தெரிவித்து இந்த மனுவினை தள்ளுபடி செய்தார்.
 
மேலும் 2 வாரத்திற்குள், முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி அவர்களின் விசாரணை ஆணையத்தை அணுகி முறையிட மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது!