திமுக ராஜ்யசபா எம்.பியான டி.கே.எஸ்.இளங்கோவன் (வயது 64), அக்கட்சியின் மக்கள் தொடர்பு செயலாளர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்...


"தி.மு.கழகத்தின் செய்தி தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த டி.கே.எஸ்.இளங்கோவன் எ.பி. அவர்கள், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்" என்று தி.மு. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. 



எதற்காக ராஜ்யசபா எம்.பியான டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தி தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதற்க்கான காரணம் எதுவும் குறிப்பிடவில்லை. 


ஆனால் தனியார் செய்தி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் திமுக சார்பில் பங்கேற்றததால் தான் நீக்கப்பட்டார் எனக் கூறப்படுகிறது. இது உண்மையா? என்று அறிந்துக்கொள்ள திமுக வட்டாரத்தை தொடர்புக்கொண்டோம், ஆனால் எங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை.