சென்னை: சென்னையில் நடந்த கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது  பேசிய  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (Chief Minister MK Stalin), தமிழ் எந்தமொழியில் இருந்தும் கடன் வாங்கி உருவான கிளை மொழி அல்ல, அது செம்மொழி, முழு முதல் மொழி என தெரிவித்துள்ளார்.


தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகத்தில் செம்மொழி தமிழ் இருக்கைகள் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு என தனியாக கட்டடம் வேண்டும் என்று கலைஞர் விரும்பினார் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


செம்மொழி தமிழாய்வு நிறுவனம் உள்ள சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் சாலை செம்மொழி சாலை என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார்.


ALSO READ | தொல்காப்பியம் இந்தி மொழியில்! கன்னடத்தில் எட்டுத்தொகை பத்துப்பாட்டு!


தமிழ் எந்தமொழியில் இருந்தும் கடன் வாங்கி உருவான கிளை மொழி அல்ல என்பதை சுட்டிக் காட்டிய முதலமைச்சர் (Chief Minister MK Stalin), தமிழில் இருந்துதான் பல மொழிகள் உருவாகின என்று சுட்டிக்காட்டினார்.



தமிழ் மொழி அனைத்து மொழிகளுக்கும் மூல மொழி என்றும்,, உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மொழியியல் அறிஞர்கள், தமிழ் தொன்மையான மொழி என கூறுகின்றனர் என்றும் தமிழின் சிறப்புகளை முதலமைச்சர் பட்டியலிட்டார்.


பண்பாட்டின் அடையாளமாக இருக்கும் தமிழ் மொழி,  பேசும்போது இனிமையாக உள்ளது என்றும், அது நமக்கு பெருமைத் தருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


Also Read | பிராந்திய மொழிகளுக்கு அமித் ஷா முக்கியத்துவம் கொடுக்கிறாரா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR