தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பருவமழை வெளுத்து வாங்குகிறது. இதையடுத்து, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பகலில் வெப்பம் அதிகரித்து வருகிறது. அந்த வேப்பசலனம் காரணமாக சென்னையின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. 


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்..! 


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மேலும்,வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். இரவில் மழை மேகம்  உருவாகும். தென் தமிழகப் பகுதிகளில் பலத்த காற்று வீசும். கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு எச்சரிக்கையுடன் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.