சென்னை: தமிழக சட்டப்பேரவை வரும் ஜனவரி 23-ம் தேதி ஆளுநர் உரையுடன் கூடுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 23-ம் தேதி துவங்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இதை உறுதிப்படுத்தி சட்டசபை செயலர் ஜமாலுதீன் இன்று அறிவிப்பை வெளியிட்டார்.


 



 


ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


5 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.