சென்னை: இன்று நாட்டின் 73-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் மோடி தொடர்ந்து 6-வது தடவையாக மூவர்ணக் கொடியை ஏற்றி உரையாற்றினார். அதேபோல சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர தின உரையாற்றி வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் உழைத்து தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்த உறுதியேற்போம் என தமிழக முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.