சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1,668 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  25,97,603 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 185 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 24 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் (Tamil Nadu) தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,663 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 19,621 ஆக உள்ளது.


கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 19 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,663 -ஐ எட்டியுள்ளது. 



தமிழகத்தில் இன்று 1,887 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 25,43,319 ஆக உயர்ந்துள்ளது. 


ALSO READ: WHO: இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் அதிகரித்துவிட்டது; உலக சுகாதார மையம் எச்சரிக்கை


இன்று மொத்தமாக 1,63,177 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 1,668 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 942 ஆண்களும் மற்றும் 726 பெண்களும் அடங்குவார்கள்.


இன்றைய நிலவரம்: 
• இன்றைய பாதிப்பு - 1,668


• இன்றைய மரணங்கள் -24


• மொத்த பாதிப்பு -  25,97,603


• இன்றைய டிஸ்சார்ஜ் - 1,887


• இன்றைய சோதனைகள் -  1,63,177


ALSO READ: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR