சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்தில் தொற்றின் அளவு ஏழு நாட்களாக சரிவைக் கண்டு வருகிறது. எனினும் இதுவும் மிக அதிக அளவுதான். தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 28,864 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் மொத்த எண்ணிக்கை 20,68,580 ஆக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டு 493 பேர் இறந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 294 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 199 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக பலி எண்ணிக்கை 23,754 ஐ எட்டியுள்ளது.


ALSO READ: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு


தமிழகத்தில் இன்று 32,982 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதன் மூலம் மொத்தம் 17,39,280 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


சென்னையில் இன்று ஒரே நாளில் 2689 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 501930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,75,11,443 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,73,351 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 3,05,546 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 12,20,401 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 16,238 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 8,48,141 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 12,626 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR