சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்தில் தொற்றின் அளவு கடந்த வாரத்தைக் காட்டிலும் சற்று சரிவைக் கண்டு வருகிறது. எனினும் இதுவும் மிக அதிக அளவுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதனன்று தமிழ்நாட்டில் (Tamil Nadu) 33,764 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் 475 பேர் இறந்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றைய எண்னிக்கையை விட இன்று 521 அதிகரித்துள்ளது. 


கடந்த பத்து நாட்களில் இன்றுதான் மிக அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழகத்தில் இன்று 29,717 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றுக்கான சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 33,10,224 ஆக உள்ளது.


இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் யாரும் இன்று பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 1325 பேர் சிறு குழந்தைகள்.  


ALSO READ: கொரோனா தடுப்பூசி வீணடிப்பு பட்டியலில் தமிழகம் 3ம் இடம்


சென்னையில் (Chennai) மட்டும் இன்று ஒரே நாளில் 3561 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தொற்றின் ஒற்றை நாள் எண்ணிக்கையில் கோவை சென்னையை பின்னுக்குத் தள்ளியுள்ளது. கோவையில் இன்று மட்டும் 4268 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது தவிர, செங்கல்பட்டு, ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, திருவள்ளூர், திருப்பூர், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி உள்ளது. 


இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 18,713 ஆண்களும் 15,051 பெண்களும் அடங்குவர். 


கடந்த வாரம் தமிழகத்தில் தொடர்ந்து எழுச்சியைக் கண்டு வந்த தொற்றின் அளவு தற்போது சரிவைக் கண்டு வருகிறது. 36,000-ஐத் தாண்டி சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக இறங்கி இன்று 33,764 என்ற அளவில் உள்ளது. 


தமிழகத்தில் மே 24 முதல் முதல் தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கு முன்னர், சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இருந்தது. ஊரடங்கின் விளைவு தற்போது தெரியத் தொடங்கியுள்ளது என நிபுணர்கள் கூறுகிறார்கள். 


முன்னதாக, தமிழ்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா நோயாளிகலுக்கான முக்கிய தகவல்களை தெரிவித்தார். கொரோனா பரிசோதனை செய்து, பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்ததும் மருத்துவமனைகளுக்கு மக்கள் படையெடுக்கத் தேவையில்லை என்று அவர் கூறினார். பாசிடிவ் என பரிசோதனை முடிவு வந்ததும், முதலில் அருகில் உள்ள ஸ்கிரீனிங் சென்டருக்கு சென்று, உடல் நலம் தொடர்பாக மருத்துவ ஆலோசனைகளை முதலில் கேட்டறிய வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.


ALSO READ: உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR