சென்னை: உலகையே தன் பிடியில் சிக்கவைத்துள்ள கொரோனா பெருந்தொற்றின் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்திலும் ஒரு நாள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகின்றது. பிற மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் ஊரடங்கால் சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதனன்று தமிழ்நாட்டில் 4,506 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,79,696 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 275 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 


கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 113 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 32,619 ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 38,191 ஆக உள்ளது.



கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 79 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 34 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 32,619 -ஐ எட்டியுள்ளது. 


தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 5,537 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 24,08,886 ஆக உயர்ந்துள்ளது. 


இன்று மொத்தமாக 1,62,622 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 4,506 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பாட்டுள்ளது.  இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,466 ஆண்களும் 2,040 பெண்களும் அடங்குவர்.


ALSO READ: டெல்டா ப்ளஸ் வைரஸ், தடுப்பூசி செயல்திறனை குறைக்குமா; அரசு கூறுவது என்ன


இது தவிர தவிர அரியலூரில் 55 பேரும், செங்கல்பட்டில் 207, சென்னையில் 257, கோவையில் 514, கடலூரில் 102, தர்மபுரியில் 114, திண்டுக்கல்லில் 54, ஈரொட்டில் 420, கள்ளக்குறிச்சியில் 115, காஞ்சிபுரத்தில் 68, கன்னியாகுமரியில் 83, கரூரில் 32, கிருஷ்ணகிரியில் 109, மதுரையில் 68, மயிலாடுதுரையில் 44, நாகப்பட்டினத்தில் 45, நாமக்கல்லில் 158, நீலகிரியில் 87, பெரம்பலூரில் 22, புதுக்கோட்டையில் 66, ராமநாதபுரத்தில் 14, ராணிப்பேட்டையில் 64, சேலத்தில் 295, சிவகங்கையில் 65, தென்காசியில் 28,  தஞ்சாவுரில் 197, தேனியில் 45, திருப்பத்தூரில் 31, திருவள்ளூரில் 105, திருவண்ணாமலையில் 199, திருவாரூரில் 71, தூத்துக்குடியில் 45, திருநெல்வேலியில் 42, திருப்பூரில் 270, திருச்சியில் 205, வேலூரில் 43, விழுப்புரத்தில் 65, விருதுநகரில் 72 பேர் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  


கடந்த 41 நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து ஒரு நாள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகிறது. 36,000-ஐத் தாண்டி சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக இறங்கி தற்போது 5,000-க்கும் கீழ் வந்துள்ளது. மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் ஊரடங்குக்கு பிறகு ஒரு நாள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகிறது. தொற்று குறைந்து வரும் நிலையில், படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 


இந்நிலையில், COVID-19 இன் இரண்டாவது அலையின் போது இந்தியாவில் 798 மருத்துவர்கள் இறந்தனர்; டெல்லியில் உயிரிழப்பு அதிகமாக இருந்தது என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. டெல்லியில் அதிகபட்சம் 128 மருத்துவர்கள் உயிர் இழந்தனர், பீகாரில் 115 பேர், உத்தரப்பிரதேசத்தில் 79  பேர் கோவிடுக்கு பலியானதாக ஐ.எம்.ஏ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  டெல்டா பிளஸ் மாறுபாட்டின் பரவலான மகாராஷ்டிரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் COVID-19 இன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


ALSO READ: New COVID Vaccine: இந்தியாவில் மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லாவுக்கு அனுமதி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR