சென்னை:  இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவில் பெரும் வீழ்ச்சியைக் காண முடிகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்திலும் (Tamil Nadu) ஒரு நாள் தொற்றின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. ஊரடங்கின் நேர்மறையான விளைவுகள் தற்போது கண்கூடாகக் காணக்கிடைக்கின்றன. 


செவ்வாயன்று தமிழ்நாட்டில் 6,895 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,36,819 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 410 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 


கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 194 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 31,580 ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 56,886 ஆக உள்ளது.



கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 136 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 58 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 31,580-ஐ எட்டியுள்ளது. 


தமிழகத்தில் இன்று 13,156 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 23,48,353 ஆக உயர்ந்துள்ளது. 


இன்று மொத்தமாக 1,65,375 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 6,895 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பாட்டுள்ளது.  இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,914 ஆண்களும் 2,981 பெண்களும் அடங்குவர்.


ALSO READ: ஒரேநாளில் 80 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி இந்தியா சாதனை


இது தவிர தவிர அரியலூரில் 71 பேரும், செங்கல்பட்டில் 286, சென்னையில் 410, கோவையில் 870, கடலூரில் 179, தர்மபுரியில் 104, திண்டுக்கல்லில் 70, ஈரொட்டில் 741, கள்ளக்குறிச்சியில் 134, காஞ்சிபுரத்தில் 98, கன்னியாகுமரியில் 110, கரூரில் 94, கிருஷ்ணகிரியில் 155, மதுரையில் 125, நாகப்பட்டினத்தில் 107, நாமக்கல்லில் 274, நீலகிரியில் 139, பெரம்பலூரில் 33, புதுக்கோட்டையில் 78, ராமநாதபுரத்தில் 40, ராணிப்பேட்டையில் 116, சேலத்தில் 485, சிவகங்கையில் 89, தென்காசியில் 41,  தஞ்சாவுரில் 372, தேனியில் 69, திருப்பத்தூரில் 61, திருவள்ளூரில் 191, திருவண்ணாமலையில் 178, திருவாரூரில் 92, தூத்துக்குடியில் 91, திருநெல்வேலியில் 48, திருப்பூரில் 434, திருச்சியில் 231, வேலூரில் 78, விழுப்புரத்தில் 103, விருதுநகரில் 98 பேர் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  


கடந்த 33 நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து ஒரு நாள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகிறது. 36,000-ஐத் தாண்டி சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக இறங்கி தற்போது 7,000-க்கும் கீழ் வந்துள்ளது. மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் ஊரடங்குக்கு பிறகு ஒரு நாள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகிறது. தொற்று குறைந்து வரும் நிலையில், படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 


நாடு முழுவதும் தடுப்பூசி செயல்முறை முழு முனைப்புடன் நடந்து வருகிறது. தடுப்பூசி (Vaccination) செலுத்திக்கொள்ள மக்கள் அதிக அளவில் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.  தமிழகத்திலும் தற்போது அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் தெரிவிப்பதைக் காண முடிகின்றது. பல பிரபலங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூறி வருகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் மிக முக்கிய பங்கு வகிப்பது தடுப்பூசியாகும். 


ALSO READ: COVID-19 தடுப்பூசி மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகிறதா; சுகாதார அமைச்சகம் கூறுவது என்ன..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR