சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1,808  பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  25,48,497 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 126 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 22 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,911 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 23, 364 ஆக உள்ளது.


ALSO READ | Corona ஏற்பட்ட பிறகு ஆன்டிபாடிகள் எத்தனை நாள் உங்கள் உடலை பாதுகாக்கும்?


தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 2,447 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 24,91,222 ஆக உயர்ந்துள்ளது. 


இன்று மொத்தமாக 1,44,219 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 1,808 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  



இன்றைய நிலவரம்: 
இன்றைய பாதிப்பு - 1,808


மொத்த பாதிப்பு - 25,48,497


இன்றைய டிஸ்சார்ஜ் - 2,447


கொரொனாவுக்கு இன்றைய பலி - 22


இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகள் - 1,44,219


ALSO READ | ஆகஸ்ட் 2ம் தேதி சட்டப்பேரவையில் கலைஞர் படத்திறப்பு விழா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR