தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 2 ஆம் தேதி கூடுகிறது என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். அதுக்குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு ஆளுநர் இந்திய அரசியலமைப்பு, பிரிவு 174 (1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தை, 2019 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி புதன்கிழமையான அன்று, காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்திய அரசமைப்பு பிரிவு 176(1)ன் கீழ், தமிழக ஆளுநர் தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் அன்றே, அதாவது 2019 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் நாள், புதன்கிழமை காலை 10.00 மணிக்கு உரை நிகழ்த்த உள்ளார். எனவே தங்கள் வருகையை வேண்டுகிறேன். 


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.