தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப்–4 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி தமிழக அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் குரூப் 4 தோ்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுதினர்.


இந்தநிலையில் அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் ரேங்க் ஆகியவற்றை தனது இணையதளத்தில் வெளியிட்டது. இந்த ரேங்க் பட்டியலில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற திருநாவுக்கரசு 14-வது இடத்திலும், செல்வக்குமார் 33-வது இடத்திலும் கிருத்திகா 144-வது இடத்திலும் உள்ளனர். 


இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.