சென்னை: கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்க வலியுறுத்தி வரும் அக்டோபர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கோவில்கள் முன்பு காலை 11 மணிக்கு, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்க வலியுறுத்தி வரும் அக்டோபர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கோவில்கள் முன்பும் காலை 11 மணிக்கு, புனிதமான நவராத்திரியின் தொடக்க நாளன்று தமிழ்நாடு மக்கள் சார்பாக பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.


திருக்கோவில்களைத் திறக்க மக்களின் தீவிர வேண்டுகோள் தொடர்ச்சியாக இருந்தபோதிலும், சாதாரண மக்களின் வேண்டுகோளுக்கு செவிமடுக்காத ஊமையாக அரசாங்கம் உள்ளது. மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத உணர்ச்சியற்ற அரசாங்கம் இரண்டாவது அலையின் உச்சத்தில் டாஸ்மாக் கடைகளை போலீஸ் பாதுகாப்போடு திறந்தது.


 



ஆனால் பக்தர்களுக்காக கோவில்கள் திறக்கப்படுவதை மட்டும் விரும்பவில்லை. மேலும் கோவில்களைச் சார்ந்த தொழில் புரியும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது.


இவ்வாறு தனது பதவில் குறிப்பிட்டுள்ளார்.


ALSO READ | சமூக நீதிக்காக போராடிய மற்ற தலைவர்களையும் இருட்டடிப்பு செய்யமால் இருக்க வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR